யாழ்ப்பாணத்தில் காளான் வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

403 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலையுடனான காலநிலையினால் காளான் வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையால் காளான் பயிர்கள் வளர்ச்சி குன்றுவதுடன், பயிர்கள் முளையிலேயே கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் யாழ் மாவட்டத்தில் காளான் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டம் காளான் பயிச் செய்கையில் தன்னிறைவு அடையாத மாவட்டமாக உள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காளான் வளர்ப்பை அதிகரிக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், அதற்காக புதிதாக விவசாயிகள் உட்புகுத்தப்பட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.