வடக்குக் கிழக்கில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு (காணொளி)

296 0

 

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நாளை மேற்கொள்ளப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு, சகல மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய மாவை.சேனாதிராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகவியலாளரகளுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் காணாமல் போனவர்களின் கதவடைப்பு போராட்டத்திற்கு வன்செயல்களற்ற ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்