இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முதற்படி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

268 0

இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முதற்படி ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பாக மாவட்ட ரீதியாக மக்கள் பிரதிநிதிகள், இராணுவத்துடன் இணைந்து களநிலமைகளை ஆராய்ந்து வரைபடமொன்று தயாரிக்கப்பட்ட பின்னர் அடுத்த சந்திப்பில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதனடிப்படையில் நாளையதினம் முல்லைத்தீவிலும் நாளை; கிளிநொச்சியிலும் இராணுவத்துடன் இணைந்து களநிலமைகள் ஆராயப்படும் அதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களிலும் களநிலமைகள் ஆராயப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.