சிறைக்குள் விமல் வீரவன்ச உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

214 0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

பிணை வழங்கப்படாமைக்கு எதிராகவே அவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் காலை மற்றும் மதிய உணவுகளை பகிஸ்கரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரச வாகனங்களை முறைகேடான வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.