காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

228 0

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி குடியிருப்பு மற்றும் யொனிக் குடியிருப்பு பிரதே மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம், இல்லாமையால் அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை

எனவே இவளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி இன்று      கவனஈர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்

அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்

இம் மாத ஆரம்பப் பகுதியில் பன்னங்கண்டி சிவா பசுபதிகம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் அவர்களுக்கான காணி உரிமம் வழங்குவதாக கூறப்பட்ட வாக்குறுதிக்கு  அமைவாக கடந்த வாரம் குறித்த போராட்டம் நிறைவுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது