போதையில் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

214 0

மிஹிந்தலையில் உள்ள பாடசாலை ஒன்றை சேர்ந்த எட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபானம் அருந்தி போதையடைந்த நிலையிலேயே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது குறித்த மாணவர்கள் மதுபானம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதையடைந்த மாணவர்கள், குறித்த பாடசாலையின் ஆசியர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவர்கள், பிறந்த தினம் ஒன்றை முன்னிட்டு இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.