எல்லைதாண்டிய குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று கடற்படையினரால் கைது(காணொளி)

259 0

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை ஒரு படகில் வந்த 10 இந்திய மீனவர்கள், கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும் காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து மருத்துவப் பரிசோதனைகளுக்காக காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து குறித்த மீனவர்கள் காங்கேசந்துறை கடற்படையினரால் யாழ் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.