புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் உரிமைகளை கோரியுள்ளனர் – சந்திரிக்கா

247 0

புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் அவர்களது உரிமைகளை கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அனைத்து மத மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அமுலில் உள்ள சட்டத்துக்கு உட்பட்ட வகையில் நாட்டில் வாழும் அனைத்து மக்களதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அரசியல் யாப்பு தயாரிக்கப்பட வேண்டும்.

அரசியல் யாப்பின் ஊடாக உரிமைகள் கிடைக்க பெற வேண்டும் என தமிழ் மக்கள் கோருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.