பல்கலைக்கழகங்களுக்கு வெளியே பகிடிவதைகள் – உதவியை நாடும் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம்

407 0

பல்கலைக்கழகங்களுக்கு வெளியே இடம்பெறும் பகிடிவதைகளை தடுப்புதற்கு காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவியை பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் நாடியுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு வெளியே சில இடங்களில் பகிடிவதை இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி – மெகொட களுகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து மாணவர்களை பகிடிவதை செய்ததுபோல மற்றுமொரு வீட்டிலும் பகிடிவதை செய்யவுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையிலேயே, காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரின் உதவியை பேராhனை பல்கலைக்கழக உபவேந்தர் நாடியுள்ளார்.