இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நன்னீர் ஆமைகள் மீட்பு

327 0

_91411028_toro2தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான அரியவகை நன்னீர் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி – கீழவைப்பாறு பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 477 நன்னீர் ஆமைகளை இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வருவாய்ப் புலனாய்வுதுறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.