லசந்தவின் கொலை வழக்கு விசாரணைக்கு வரவேற்பு

300 0

625-500-560-350-160-300-053-800-900-160-90முன்னாள் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு துரிதமாக விசாரணை செய்யப்படுகின்றமை குறித்து ஊடகவியலாளர் காப்பு குழுமம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

அதன் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்.

அவரது கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் அவரது சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணைகள் நேர்மையாக இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.