பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மனு(காணொளி)

382 0

fr-sakthivel

நுவரெலியா ஹட்டன் புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மலையக ஆய்வு சமூக மையம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
கொழும்பு கிங்ஸி வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்திற்கு மலையக சமூக ஆய்வு மையத்தின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் சென்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
மலையக சமூக ஆய்வு மையத்தினால் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து அதன் செயலாளர் அருட்தந்தை மா.சக்திவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.