நல்லூர் உற்சவத்தின் பொருட்டு விசேட நிகழ்வுகள்

303 0

5nallurயாழ்ப்பாணம் நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு, இன்று முதல் யாழ்ப்பாணத்துக்கான விசேட தொடருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இலங்கை தொடருந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்த விசேட சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் அதாவது செப்டம்பர் முதலாம் திகதிகளில் கல்கிஸ்ஸை தொடருந்து நிலையத்தில் இருந்து, காங்கேசன்துறை தொடருந்து நிலையம் வரையில் செல்லும் 4021 என்ற இலக்கம் கொண்ட தொடருக்கு மேலதிக பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம், நல்லூர் உற்வசத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகளை ஒழுங்குச்செய்துள்ளது.

நல்லூரில் உள்ள பொதுசுகாதார சேவை நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தில் இந்த நிகழ்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இவை எதிர்வரும் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளன.

இளைஞர்களுக்கான போட்டி நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களை மதுபானங்களில் இருந்து பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி ஒன்றும் இந்த நாட்களில் இடம்பெறவுள்ளன.

எனவே இளைஞர்கள் நிகழ்வுகளில் சுயமாக பங்கேற்க வேண்டும்.

அதேநேரம் பெற்றோர் தமது சிறுவர்களை குறித்த நிகழ்வுகளில் பங்கேற்கசெய்யவேண்டும் என்று மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.