அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் போது கடல் பகுதிகள் கொந்தழிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, வட மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மாகாணத்தின் மலையகப்பிரதேசங்களிலேயே இடியுடன் கூடிய மழை காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மலையகத்தில் நேற்று காலை முதல் நிலவி வரும் சீரற்ற கால நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப் படைந்துள்ளது.
பனி மூட்டம் நிறைந்து காணப் படுவதால் ஹட்டன், தலவாக்கலை மற்றும் நுவரெலியா பகுதிகளுக்கு பயணிப்போர் அவதானத்துடன் செல் லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
மேலும் வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் கடல் பிரதேசங்களில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற் றர் வரை காற்றின் வேகம் காணப்ப டும். இந்த நிலைமை எதிர்வரும் 5 நாட்களுக்கு தொடரும். எனவே இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் அறிவுறுத்தியுள்ளது.

