நீரேந்துப் பகுதியிலுள்ள மக்கள் அவதானம்!

268 0

மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கப் பகுதிகளுக்கு பெய்த கடும் மழையின் காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமலசுரேந்திர நீர்த்தேக்கமும் நிரம்பியுள்ளதாகவும் இதனால் களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நீரேந்துப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment