ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணித்தது கூட்டமைப்பு

270 0

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

அதனை புறக்கணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா இன்று யாழ். இந்துக் கல்லூரியல் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.

குறித்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment