யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை

431 0

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய உணவு உற்பத்தி வாரத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கே யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாண காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a comment