பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது(காணொளி)

3339 0

வட மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது.

முல்லைத்தீவில் மாவட்டம் தழுவிய ரீதியில் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அரச தனியார் பேக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டு முழுமையான ஆதரவு வழங்கின.

முல்லைத்தீவு நகரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, துணுக்காய், விசுவமடு, பாண்டியன்குளம் போன்ற பிரதேசங்களில் வணிக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு போராட்டத்திற்கு முழுமையன ஆதரவு வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் போக்குவரத்து பணிகள் அனைத்தையும் நிறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன், பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment