மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

1101 0

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தால் இன்று மன்னாரிலும் அனுஸ்டிக்கப்பட்டது.
இதற்கமைய, மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன.
மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தன.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாத நிலையில் பாடசாலை நடவடிக்கைகளும் செயலிழந்தன.

Leave a comment