பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.!

264 0

அனுமதிபத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டு சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிக்கோயா புளியாவத்தை தோட்ட பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு இன்று அதிகாலை இறைச்சிக்காக கொண்டு சென்று கொண்டிருந்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாடுகளை கொண்டு சென்ற லொறியை பொலிஸார் டிக்கோயா பகுதியில் வைத்து இடைமறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் போதே இவ்வாறு அனுமதிபத்திரமின்றி மாடுகளை கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.

அதன்பின் பசு மாடுகளையும், அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment