தப்பியோட முயன்ற கைதி ; சிறைக்காவலர்களால் மடக்கிப் பிடிப்பு

668 0

நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பியோட முயன்றதையடுத்த சிறைக்காவலர்களால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் கைதுசெய்த சம்பவமொன்று இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கைதி சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறித்த கைதி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து சிறைக்காவலர்கள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைதியை மீண்டும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment