“ரயில் பருவகாலச் சீட்டுக்களை பேருந்துகளில் பயன்படுத்தலாம்

301 0

ரயில் போக்குவரத்துக்காக பருவகாலச் சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதைப் பயன்படுத்தி அரச போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தலாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

திடீரென நேற்று ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், பொதுப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அதை இலகுபடுத்துவதற்காக மேலதிக பேருந்துகளை இயக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, அரச பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளின் விடுமுறைகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டும் உள்ளன.

இந்நிலையில், ரயில்வே பருவகாலச் சீட்டுக்களை வாங்கியவர்கள் குறித்து ஆலோசித்த போக்குவரத்து அமைச்சு, அந்தச் சீட்டுக்களைக் கொண்டு அரச பேருந்துகளில் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.

குறிப்பாக, அதிவேக நெடுஞ்சாலைகளிலும் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளிலும் இந்தப் பருவச் சீட்டுக்கள் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment