2018 வரவு செலவுத் திட்டம் மூலம் தனியார் துறையை ஊக்குவிக்க கூடுதல் கவனம்

227 0

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் இலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்காக தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர
உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மென்கட்சு அல்மேயேஹூவை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.
இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பு நேற்று வாஷிங்டனில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment