உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றில் மனு

218 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு​வொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு , இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது ஜன முன்னணியின்                          த​லைவரும் முன்னாள் வௌிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

குறித்த மனுவில் சபாநாயகர், சட்டமா அதிபர்  மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு கடந்த 9ம் திகதி நீதியரசர் பிரசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் , விசாரணைகள் அன்றைய தினம் நிறைவு பெறாத பட்சத்தில் எதிர்வரும் 19ம் திகதி மீண்டும் குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a comment