தெல்லிப்பளை வைத்தியசாலை தாதியர் அறைக்குள் கொள்ளை

219 0
தெல்லிப்பளை வைத்தியசாலையின் தாதியர் அறைக்குள் நேற்று புகுந்த இனந்தெரியாத நபர் தாதிய உத்தியோகத்தர் ஒருவரின் கைப்பையில் இருந்த பணத்தைக் களவாடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் சுமார் ஒரு மணியளவில் ஓர் இளையர் விடுதிக்குள் நுளகந்துள்ளார். இவ்வாறு நுழைந்தவர் நோயாளரைப் பார்வையிடுவதுபோன்று பாசாங்கு செய்த பின்னர் திடீரென தாதியர் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த தாதியர்களின் கைப்பைகளில் தேடுதல் மேற்கொண்டுள்ளார்.
இதனை அவதானித்த ஓர் தாதியர் ஏனைய உத்தியோகத்தர்களின் உதவியை நாடிய சமயம் குறித்த நபர் தப்பியோடியுள்ளார். இவ்வாறு தப்பியோடியவரை சிலர் விரட்டியபோதும் முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதனால் குறித்த தாதிய உத்தியோகத்தர் 4 ஆயிரம் ரூபா பணத்தினை இழந்தார்

Leave a comment