உயர்தர ஆசிரியர்கள் மூவாயிரம் பேர் நாளை முதல் இடமாற்றம்!

202 0

ஆசிரியர்களை இடமாற்றுவதற்கான தேசிய கொள்கையின் கீழ், பத்து வருடங்கள் தொடர்ச்சியாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்கள் நாளை (12) முதல் இடமாற்றப்படவுள்ளனர்.

இதன்படி, சுமார் பன்னிரண்டாயிரம் ஆசிரியர்கள் இடமாற்றப்படவுள்ளனர். இவர்களுள், உயர்தர ஆசிரியர்களாகப் பணியாற்றும் சுமார் மூவாயிரம் ஆசிரியர்களே நாளை முதல் இடமாற்றப்படவுள்ளனர்.

இவர்களுக்கான இடமாற்றல் உத்தரவுப் பத்திரங்கள் நாளை குறித்த பாடசாலை அதிபர்களுக்க வழங்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்தக் கொள்கை அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment