துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று குறித்த பெண் இந்தியாவிற்கு செல்வதற்காகவே இவ்வாறு பயணித்தமை தெரியவந்துள்ளது.
இவர் 52 வயதான இந்தியப் பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது. சடலம் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

