பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 29 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

