நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு பேர் இரவோடிரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தங்கல்லை சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிற்கு செல்ல முடியாமல் ஹம்பாந்தோட்ட மேம்பாலத்துக்கு அருகில் சிலர் டயர்களை வீதியில் எரித்து தடை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வருகை தந்து சிறைச்சாலை வாகனத்துக்கு செல்ல பாதை சரிசெய்து கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.