நாமல் ராஜபக்ஷவுக்கு 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

227 0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வீ. சானக உட்பட ஆறு பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நேற்றிரவு (10) இவர்கள் ஹம்பாந்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடையே பிரசன்ன ரணவீர எம்.பி. யும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்காகவே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment