இலங்கை, ஃபின்லாந்தின் பிரதமர்கள் சந்திப்பு

326 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஃபின்லாந்தின் பிரதமர் ஜுஹா சிபிலாவை சந்தித்துள்ளார்.

ஃபின்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஹெல்சின்கியில் அந்த நாட்டின் பிரதமரது இல்லத்தில் வைத்து அவரை சந்தித்துள்ளார்.

இதன்பொது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலோங்கச் செய்வதற்கான பொதுவான விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.

அத்துடன் சக்திவளப்பகிர்வு, வர்த்தக நோக்கிலான அணுகல்கள் தொடர்பிலும் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் கடல் அலை சக்தியின் ஊடாக மின்சாரத்தைப் பெறும் வேலைத்திட்டம் குறித்தும் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளார்.

இதேவேளை ஃபின்லாந்தில் பேணப்படும் குப்பைகூள முகாமைத்துவக் கொள்கை மற்றும் குப்பைக்கூளங்களை சக்திவளங்களாக மாற்றும் செய்கைகளையும் பிரதமர் கண்காணித்துள்ளார்.

Leave a comment