ஐ.தே.க – சுதந்திரக் கட்சி கூட்டணியினால் எதனையும் செய்ய முடியாது

278 0

JVP-640x400ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டணியினால் எதனையும் செய்ய முடியாது என ஜே.வி.பி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணியினால் எதுவும் நடக்காது என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர்.எனினும் தற்போது மக்களின் ஆதரவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து ஜே.வி.பி தலைமையிலான மக்கள் சக்தியொன்று கட்டியெழுப்பப்படும்.

சிவில் அமைப்புக்கள் புத்திஜீவிகள் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.