இறந்த அகதியின் சடலத்தை அனுப்பும் பொறுப்பு தம்முடையது அல்ல என்கிறது அவுஸ்ரேலிய தூதரகம்!

319 0

பப்புவா நியூகினியில் உள்ள மனுஸ் தீவு தடுப்பு முகாமில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் உடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம் பணம் கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்துள்ளது.

“மனுஸ் தீவில் மரணமடைந்த இலங்கைத் தமிழர் ராஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலை இலங்கைக்குக் கொண்டு வருவதற்காக அவரது உறவினர்களிடம் பணம் கேட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவின் பூதவுடலை இலங்கைக்குக் கொண்டுவர நிதியளித்து உதவுமாறு அவரது உறவினர்கள் அவுஸ்திரேலிய அரசையோ, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தையோ அணுகவில்லை. மேலும், ராஜீவ் பப்புவா நியூகினியில் மரணமடைந்ததால் அவரது உடலைத் திருப்பியனுப்புவது அந்நாட்டின் பொறுப்பாகும்.” இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment