கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்க வேண்டாம் -ஆளுநர் ரோஹித போகொல்(காணொளி)

10020 0

கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவொரு அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம் என, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திணைக்களங்களின் செயலாளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், திணைக்களங்களின் செயலாளர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பில், இவ் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை எவ்வித இடமாற்றங்களும் வழங்க வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிமனையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வருடாந்த இடமாற்றம், ஜனவரி மாதம் வழமை போல் நடைபெறுமென, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.