பூம்புகார் கிராமம் போதைப்பொருள் கடத்தும் மையமாக காணப்படுகினறது-  பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் (காணொளி)

14104 0

அரியாலை கிழக்கு பூம்புகார் மற்றும் கொழும்பு துறை பகுதிகளில் போதைப்பொருள், கஞ்சா என்பன பொதிகளாக்கப்பட்டு விற்பனையும் விநியோகமும் நடைபெறுகின்றது என தெரிவித்துள்ள பேராசிரியர் மோகனதாஸ், போதைப்பொருள் பொதியிடுதலில் பெண்கள் ஈடுபடுகின்றர்கள் என அப் பிரதேசத்தில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றர்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அப்பகுதி இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையான நிலை காணப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்கு நடமாடும் சேவைகளை எற்படுத்தி போதை பொருள் விநியோகம் மற்றும் பாவனையை கட்டுபடுத்த பொலிஸ்சார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பேராசிரியர் மோகனதாஸ் கேட்டுகொண்டார்.

Leave a comment