பிணை முறி விநியோகம் தொடர்பில் ரகசிய காவற்துறை விசாரணை

300 0

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலத்தில் இடம்பெற்ற பிணை முறி விநியோகம் தொடர்பில் ரகசிய காவற்துறையால் குற்ற விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு , பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தப்புல த லிவேரா இது தொடர்பில் இன்று அறிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று மீண்டும் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் , சாட்சி விசாரணையில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment