யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

329 0

Jaffn-Uniயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் 3 மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கலை மற்றும் வர்த்தகத்துறையைச் சேர்ந்த 3 மாணவர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.