மின்சார விநியோகத் தடை ஏற்பட்டமை தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது

283 0

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது மின்சார விநியோகத் தடை ஏற்பட்டமை தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது

மின்சாரத்தறை பதில் அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளின் திருத்தச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்டது.

இதன்போது சபையின் அனைத்து மின்விளக்குகளும் அணைந்த போதும், ஒலிவாங்கிகள் மாத்திரம் தொழில்பட்டன.

சில நிமிடங்களில் மின்விநியோகம் சீரடைந்திருந்தது.

Leave a comment