மியான்மார் ஏதிலிகள் பூஸா முகாமிற்கு மாற்றம் – காவல்துறை

4667 0

முன்னதாக பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால், குறித்த 30பேரும் பாதுகாப்புக்காக காரணங்களுக்காக காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம்; அவர்கள் 30பேரும் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தப்பிச்சென்றபோது இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்

பின்னர் அவர்கள் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரத்திடம் கையளிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அந்த உயர்ஸ்தானிகரமே ஏதிலிகளை கல்கிஸ்ஸையில் தங்கவைத்திருந்தது.

இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்வரை அவர்கள் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment