பெண்களிடம் நிதி மோசடி செய்தவர் கைது

4513 0

பெண்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர், அம்பலன்கொட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் பெண்களை ஏமாற்றி காணி உறுதிகளை ஈடுவைத்து மூன்று கோடிக்கும் அதிக நிதியை மோசடி செய்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட போது, அவர் வசம் இருந்து, வாடகைக்கு பெறப்பட்ட, காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யக்கலமுல்லை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment