மகிந்த அணியினரால் முன்வைக்கப்பட்ட பல்வேறு போலிப் பிரசாரங்கள்- மனோகணேசன்

28662 0

மகிந்த அணியினரால் முன்வைக்கப்பட்ட பல்வேறு போலிப் பிரசாரங்களை, அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கை பொய்பித்திருப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அரசாங்கம் உருவாக்கப்படும் என்று, வடக்கு கிழக்கு மீள இணைக்கப்படும் என்றும், புத்த மதத்துக்கான முன்னுரிமை இல்லாமல் செய்யப்படும் என்றும் மகிந்த அணியினர் பிரசாரம் செய்து வந்தனர்.

ஆனால் புதிய அரசியல் யாப்பின் ஊடாக வடக்கு கிழக்கு இணைக்கப்படாது.

சமஷ்டி அடிப்படையில் புதிய யாப்பு அமையவில்லை என்பதுடன், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் அற்றுப் போகவில்லை.

எனவே மகிந்த அணி தற்போது எதிர்கால அரசியலுக்காக புதிய பொய்களை உருவாக்க வேண்டும் என்றும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a comment