காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

386 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் 214 வது நாட்களை எட்டியுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் தங்கள் போராட்டத்திற்கு தீர்வு எதனையும் வழங்கவில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாட்கள் இந்த அடையாள உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

வவுனியா கந்தசாமி கோவில் வளாகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆராதனையில் ஈடுபட்டதன் பின் உண்ணாவிரதிகள் வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள போராட்டம் நடைபெறும் கொட்டகைக்கு வருகை தந்து தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment