இலங்கையின் புதிய வரைபடம் அடுத்த வருட நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.
நாட்டின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இந்த புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுவருவதாக அளவையாளர் நாயகம் பீ.எல்.பீ உதயகுமார குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினாலும் கொழும்பு துறைமுக நகரத்தினாலும் இலங்கையின் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரைபடத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

