காவல்துறை சுற்றிவளைப்பில் பலர் கைது

233 0

ஹூங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஹூங்கம, கொரகஹவல, சமாதிகம மற்றும் லுனம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கஞ்சா வைத்திருந்தமை, சட்டவிரோத மதுபான உற்பத்தி ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சாட்டப்பட்டுள்ளது.

Leave a comment