இந்தியர் கைது

281 0

சட்டவிரோத வெளிநாட்டு பணத்தொகையுடன் இந்தியா நோக்கி செல்ல முற்பட்ட இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு கோடி ரூபாய்  பெறுமதியான வெளிநாட்டு பணத்தொகை சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை டெல்லி நோக்கி செல்ல வந்த இந்த இந்திய பிரஜை, சூட்சுமமாக தனது பயணப்பையில் இந்த வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்திருந்துள்ளார்.

இதில் 62 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்கள் இருந்துள்ளன.

கட்டுநாயக்க பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment