30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டையுடன் சந்தேகநபர் கைது

242 0

சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டுக்கு வல்லப்பட்டை தொகையொன்றை எடுத்துச்செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு, தெமட்டகொட பகுதியை சேர்ந்த 54 வயதுடைய வர்த்தகர் என அடையாளங்காணப்பட்டுள்ளது.சந்தேகநபரிடமிருந்து சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 கிலோகிராம் வல்லப்பட்டை மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு 3 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment