சைட்டத்திற்கு எதிரான போராட்டம் வெற்றி – GMOA

238 0
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்பட வேண்டும் என கோரி அரச மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது.
இந்த போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடைகிறது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சில துறைகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் குறித்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தன.
இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்தாலும், எதிர்காலத்தில் தீர்க்கமான தீர்வு ஒன்று எட்டப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Leave a comment