08 கோடிக்கும் அதிகமான பணத்துடன் இருவர் கைது

264 0

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணய தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயை நோக்கி செல்ல முயற்சித்த இருவரையும் இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 88 மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டன.

தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 24 வயது மதிக்கத்தக்க ஆணுமே குறித்த நாணய தாள்களை சட்டவிரோதமாக கடத்த முயற்சித்ததாக சுங்கப்பிரிவினர் மேலும் தெரிவித்தனர்

Leave a comment