அர்ஜுனவிடம் நாளை குறுக்கு விசாரணை

226 0

மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம் நாளை சட்­டமா அதிபர் தரப்­பி­னரால் குறுக்கு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. பதில் சொலி­சிட்டர் ஜெனரல்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவே­ராவின் கோரிக்­கைக்கு அமை­வாக ஆணைக்குழு இந்த குறுக்கு விசா­ர­ணை­களை நடத்த சம்­ம­தித்­த­துடன் அதுவரை ஆணைக்குழு நட­வ­டிக்­கை­க­ளையும் ஒத்திவைத்­தது.

பிணைமுறி மோசடி தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக்குழுவில் நேற்று இரண்­டா­வது நாளா­கவும்  மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன் சாட்­சி­ய­ம­ளித்தார். நேற்று காலை 10 மணிக்கு ஆரம்­ப­மான ஆணைக் குழுவின் விசா­ர­ணை­களில் தனது சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்­வாவின் நெறிப்­ப­டுத்­தலில் சுமார் 10 நிமி­டங்கள் அர்­ஜுன மகேந்­தி­ரன் சாட்­சியம் அளித்த பின்னர் சாட்­சி­ய­ளிப்பு நிறை­வுக்கு வந்­தது.

இச் சாட்­சியத்தின் போது,  பிணைமுறி ஏலம் தொடர்பில் அர்ஜுன அலோ­சி­ய­ஸுக்கு தான் எந்த வகை­யிலும் உதவி செய்­ய­வில்லை எனவும், மத்­திய வங்­கியின் எந்த ஒரு அதி­கா­ரி­யையும் தான் அவ்­வாறு உதவிசெய்ய வற்­பு­றுத்­த­வில்லை எனவும் அர்­ஜுன மகேந்­திரன் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இந்த சாட்­சியத்தின் பின்னர், மத்­திய வங்­கியின்  முன்னாள் பிரதி ஆளு­நர்­களில்  ஒரு­வ­ரான சம­ர­சிறி சார்பில் ஆணைக்குழுவில் ஆஜ­ரான  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹர்ஷ டி சில்வா குறுக்கு விசா­ர­ணை­களை தொடங்­கினார். எனினும் அர்ஜுன அலோ­சி­யஸின் சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஏ பிரே­ம­ரத்ன, பேப்­பச்சுவல் ட்ரசரீஸ் நிறு­வன சட்­டத்­த­ரணி ஆகியோர் தமக்கு குறுக்கு விசா­ர­ணைக்கு அவ­சியம் இல்லை என அறி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து குறுக்கு விசா­ரணை செய்யும் பொறுப்பு ஆணைக்குழு­வுக்கு உதவும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு பாரப்­ப­டுத்­தப்பட்­டது. இதன்போது விசேட வாதம் ஒன்­றினை முன்­வைத்த பதில் சொலி­சிட்டர் ஜெனரல் ஜன­ாதிபதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா, அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம் குறுக்கு விசா­ரணை செய்ய கால அவ­காசம் வேண்டும் எனவும் நாளை வெள்­ளிக்­கி­ழமை அந்த குறுக்கு விசா­ர­ணை­களை செய்­வ­தா­கவும் அறி­வித்தார்.

அர்­ஜுன மகேந்­தி­ரனின் சாட்­சி­யத்தை மட்­டு­மல்­லாது இதற்கு முன்னர் பலர் வழங்கிய சாட்­சி­யங்கள், ஆவ­ணங்­களை பரி­சீ­லித்து விப­ர­மான குறுக்கு விசா­ர­ணைகள் செய்­யப்­பட வேண்­டிய அவ­சியம் உள்ள நிலையில் இந்த கால அவ­கா­சத்தை கோரு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.  எனினும் இதற்கு அர்­ஜுன மகேந்­தி­ரனின் சட்­டத்­த­ரணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா எதிர்ப்பு வெளி­யிட்டார்.  தமது தரப்பு சேவை பெறு­ந­ரான அர்­ஜுன மகேந்­திரன் உண்­மையை கூறிய நிலையில், குறுக்கு விசா­ர­ணைக்கு அவ­சியம் இல்­லா­ததால் சட்­டமா அதிபர் சதிசெய்ய கால அவ­காசம் கோரு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.

இதன்போது ஆணைக்குழு உறுப்­பி­ன­ரான நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன, சட்டமா அதிபர் திணைக்­களம் ஆணைக்­கு­ழு­வுக்கு உத­வு­வ­தற்­கா­கவே செயற்­படும் நிலையில், அவர்கள் பாரிய கோவை­களை ஆராய வேண்டும் எனவும் அதற்கு கால அவகாசம் வழங்­கு­வது நியா­ய­மா­னது எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து ஆணைக் குழுவின் தலைவரான  நீதியரசர் சித்ரசிறி, ஏனைய உறுப்பினர்களான நீதி யரசர் பிரசன்ன ஜயவர்தன, ஓய்வுபெற்ற கணக்காய் வாளர்  நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகி யோருடன் ஆலோசித்துவிட்டு குறுக்கு விசாரணை களை நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத் தார். அதன்படி இன்று ஆணைக்குழுவின் விசார ணைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

Leave a comment