கொழும்பு, புறக்கோட்டையில் தீ; மூன்று கடைகளுக்கு சேதம்

255 0

நேற்று நள்ளிரவில் கொழும்பு, புறக்கோட்டை குமார வீதி பிரதேசத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக அருகில் இருந்த 03 வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தற்போது தீ கட்டுப்பாடுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் மூன்று கடைகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து தீயணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என்பதுடன், இச்சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment